தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகியாக விளங்கும் நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

முன்னதாக அரவிந்த் சுவாமியுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 திரைப்படம் நிறைவடைந்தது ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன்-2 திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தமிழில் ஆக்சன் த்ரில்லர் படமாக த்ரிஷா தி ரோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ராம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக தயாராகும் ராம் படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து முதல் முறை வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கும் த்ரிஷா நடிப்பில் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் சீரிஸும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் த்ரிஷாவிற்கு தற்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டும் போட்டிருக்கும் புகைப்படத்தையும், காலில் ஐஸ் கட்டி பேக் வைத்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இதனை த்ரிஷா தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இதோ…
tamil actress trisha leg got injured