தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார் சூர்யா.

இதனை அடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார்.இவற்றை தவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகும் சூர்யா 42 படத்தில் நடிக்கிறார்.UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் சூர்யா.

இவர் நடிகை ஜோதிகாவை 2006-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் தேவ்,தியா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.சூர்யா ஜோதிகா இருவரை போல வாழ வேண்டும் என பலரும் ஆச்சரியப்படும் வகையில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.சூர்யா ஜோதிகா இருவரும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்