அசத்தலான வடிவில் ரசிகர்களை சென்றடையும் சூர்யாவின் ஜெய்பீம் படம்! குவியும் பாராட்டுக்கள்
By Anand S | Galatta | January 05, 2023 21:30 PM IST
ஆகச்சிறந்த நடிகராக தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து தரமான படைப்புகளாக வழங்கி வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சூர்யா சமீபத்தில் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் சூர்யா42 திரைப்படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். சூர்யா42 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவான நடிகர் சூர்யா, தயாரித்து நடித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி உலக அளவில் பாராட்டுகளை பெற்றதோடு ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். அருஞ்சொல் & 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.” என தெரிவித்துள்ளது. பலரது பாராட்டுகளை பெற்ற அந்தப் பதிவு இதோ…
ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். @arunchol – #2DEntertainment இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி. pic.twitter.com/tkwI5k6daA
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 5, 2023