ஹேக் செய்யப்பட்ட சூர்யாவின் அகரம் இன்ஸ்டாகிராம் பக்கம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | September 24, 2022 19:40 PM IST
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார் சூர்யா.இதனை அடுத்து பாலாவின் வணங்கான்,சிவா இயக்கத்தில் சூர்யா 42 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி , அகரம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் பல ஏழை,எளிய மாணவர்களுக்கு படிப்பு உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகிறார்.பலரும் சூர்யாவுடன் இந்த அகரம் தொண்டு நிறுவனத்தில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அகரம் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிலிருந்து வரும் மெசேஜ் உள்ளிட்டவற்றுக்கு ரசிகர்கள் இப்போது பதிலளிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர் பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கம் சரிசெய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Ability Foundation Hosts Short Film Contest
17/08/2017 05:39 PM
D. Imman rocks Chennai Foundation's 'Iniya Geethangal'
06/02/2017 07:38 PM
K Balachander Foundation - in memory of the legend
16/03/2015 06:42 PM