தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கமர்ஷியல் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர்.சி. நடிகராகவும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் சுந்தர்.சி , அடுத்ததாக இயக்குனர் மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மற்றும் தலைநகரம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி-யின்  அரண்மனை-3 திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் அரண்மனை-3 படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

அரண்மனை-3 திரைப்படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா & ராஷி கண்ணா கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விவேக், மைனா நந்தினி, மனோபாலா, நளினி, சாக்ஷி அகர்வால், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் C.சத்யா இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான அரண்மனை-3 ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அரண்மனை3 படத்திலிருந்து 4-வது பாடலாக பாடலாசிரியர் ப.விஜய் எழுதிய செங்காந்தளே பாடல் வெளியானது.  இந்தப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.