1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வந்தார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,பின்னர் ஷூட்டிங் தொடங்கிய பின் சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டன.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி,தர்ஷனா உள்ளிட்டோர் இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் இருந்தும் சீரியல் நடிப்பில் இருந்தும் வெளியேறுவதாக ராதிகா சில மாதங்களுக்கு முன் திடிரென முடிவெடுத்தார்.ராதிகா இல்லாமல் இந்த தொடரின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.

500 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.தற்போது அதிர்ச்சி தரும் விதமாக இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.வெகு விரைவில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பவுள்ளது என்று தெரிகிறது.சற்று எதிர்பாராத விதமாக திடீரென சீரியல் நிறைவடையவுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.