என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக தயாராகவுள்ளது ஜெயிலர் திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டதை அறிவிக்கும் வகையில் சூப்பர்ஸ்டாரின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் திரு.கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

முன்னதாக முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதே போல் டாக்டர், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், பீஸட் படத்தின் படத்தொகுப்பாளர் நிர்மல் மற்றும் கலை இயக்குனராக DRK.கிரண் ஆகியோரும் ஜெயிலர் திரைப்படத்தில் பணியாற்ற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சேது, நந்தா, பிதாமகன், வேட்டையாடு விளையாடு, ஏகன், காவலன், இமைக்கா நொடிகள், அடங்கமறு உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ள ஸ்டன் சிவா ஜெயிலர் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற உள்ளதாக ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…
stun shiva joins in jailer movie team super star rajinikanth