தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் SJ.சூர்யா கதாநாயகனாக மட்டுமல்லாமல் முன்னணி கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் தற்போது அசத்தி வருகிறார். அந்தவகையில் கடைசியாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் தனுஷ்கோடி எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஏற்கனவே இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மெர்சல் படத்திலும் வில்லனாக SJ.சூர்யா அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்திலும் SJ.சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் RC15 படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி, ஜெயராம், SJ.சூர்யா, ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, நாசர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, S.தமன் இசையமைக்கிறார்.

RC15 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் SJ.சூர்யா RC15 படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 11) RC15 திரைப்படத்தில் தான் வில்லனாக நடிப்பதாக தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் SJ.சூர்யா பதிவிட்டுள்ளார். SJ.சூர்யாவின் அந்த பதிவு இதோ…
 

#WOW dir @shankarshanmugh sir🥰🙏 peeped his sets when I was junior artist , did a cameo in nanban, now as antagonist🙏- same command, more energy pulled the best from everyone🥰am continuously admiring & learning a lot fromU sir as a fan & as an actor in Ur set🙏 #RC15 JUST KEKA

— S J Suryah (@iam_SJSuryah) September 11, 2022