உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Sivakarthikeyan Donates Rs 10 Lakhs For FEFSI

பள்ளி கல்லூரிகளுக்கு,அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.

Sivakarthikeyan Donates Rs 10 Lakhs For FEFSI

இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இதனை அடுத்து சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ருபாய் உதவித்தொகையை வழங்கினார்.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சத்தை உதவித்தொகையாக அளித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.