தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிலம்பரசன்.நடிப்பு,டான்ஸ்,இயக்குனர்,பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,பாடகர் என சினிமாவின் அனைத்து பரிமாணங்களையும் அறிந்த பன்முகக்கலைஞராக திகழ்பவர் சிம்பு.இளம் வயதிலேயே பெரும் புகழையும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் சிம்பு பெற்றிருந்தார்.

எவ்வளவு புகழ் வந்ததோ அதே அளவு சர்ச்சைகளை சந்தித்த ஒரே நடிகர் சிம்பு மட்டும்தான்.இடையில் சில காரணங்களால் ஒரு படத்தின் ஷூடிட்ங்கிற்கு சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பித்து பல குற்றச்சாட்டுகளை சிம்பு மீது சுமத்தி வந்தனர்.சிம்புவும் அதற்கு ஏற்றார் போல உடலெடை கூடியது என்று இருக்க அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

அவ்வளவு தான் சிம்பு என்று பலரும் பேசி வந்த வேளையில் விமர்சனங்களை உடைத்தெறிந்து ரசிகர்கள் காட்டிய அன்பிற்காக மீண்டு புது அவதாரத்தில் வந்தார் சிம்பு.சில காரணங்களால் இடையில் சில சலசலப்புகளை சந்திக்க நேர்ந்தது என்றும் இனி அப்படி ஒருபோதும் இருக்காது என்றும் சிம்பு வாக்குறுதி அளித்தார்.அதேபோல ஈஸ்வரன்,மாநாடு என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.தற்போது மீண்டும் சிம்பு பட ஷூட்டிங்கில் பிரச்சனை என்று பூகம்பம் வெடிக்க என்னதான் நடக்கிறது என்பதை அறிய சிம்புவின் மேனேஜர் ஹரிஹரன் கஜேந்திரன் அவர்களை சந்தித்தோம்.நமது நேர்காணலில் பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.அவர் கூறிய சில தகவல்கள் இதோ

சிம்புவின் படம் என்றாலே சிலர் பிரச்சனை செய்கின்றனர்,சிம்பு தற்போது இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக முடிக்கவேண்டும் என்றும் ரசிகர்ளுக்காக தொடர்ந்து எந்த பிரச்னையும் இன்றி படங்கள் நடிக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்.இருதரப்பினருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பிரச்சனைகளை முடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் ஆனால் சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து வருகின்றனர்.விஷாலும் நடிகர் சங்கமும் ஒழுங்கான முறையான வேலையை செய்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்காது.இனி எந்த சிம்பு படம் வந்தாலும் ரசிகர்கள் எந்த பிரச்னையும் இன்றி திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்ற நிலைமையை கொண்டுவர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார் இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்