தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட கடந்த செப்டம்பர் 15-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இதுவரையில்லாத புது ஸ்டைலில் வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய தகவலை நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார். "வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பார்ட் 2 இன்னும் பிரமாண்டமாக PAN INDIA திரைப்படமாக வேற லெவலில் இருக்கும்" என தெரிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்தும் தனது தயாரிப்பில் வெளிவரும் அடுத்தடுத்த படைப்புகள் குறித்தும் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் பேசிய அந்த வீடியோ இதோ…