2005-ல் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த மழை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ரேயா சரண்.இந்த படத்திற்கு முன் உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த ஷ்ரேயா.இந்த படத்தின் மூலம் முழுநேர கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி,தளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகன்,தனுஷுடன் குட்டி,விக்ரமுடன் கந்தசாமி என்று பெரிய நடிகர்களுடன் நடித்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் ஷ்ரேயா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் ஷ்ரேயா.

டாப் ஹீரோயினாக அனைத்து மொழிகளிலும் கலக்கினார் ஷ்ரேயா.ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் ஷ்ரேயா.இவர் நடிப்பில் நரகாசூரன்,சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் RRR படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ஷ்ரேயா.

தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தனக்கு பெண் குழந்தை 2020-ல் பிறந்துள்ளது என்று சர்ப்ரைஸாக அறிவித்துள்ளார்.இந்த செய்தியை எப்படி ரகசியமாக இத்தனை நாட்கள் வைத்திருந்தார் என்று ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.ஷ்ரேயாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறன்றனர்.