இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல்,பிகில் என்று படங்களை இயக்கினார் அட்லீ.

மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ .அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார் நயன்தாரா.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இவரை தவிர ப்ரியாமணி,யோகி பாபு, Sanya Malhotra,Sunil Grover உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பு டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் ஜூன் 2 2023-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெற்று வருகிறது.சென்னையில் இந்த படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.சென்னையில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.இதுகுறித்து ஷாருக் கான் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

படப்பிடிப்பு நடைபெற்ற 30 நாட்கள் மிகவும் அழகாக படக்குழுவினர் பிளான் செய்திருந்தனர் , அதோடு  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செட்டிற்கு வந்தது,நயன்தாராவுடன் படம் பார்த்தது,அனிருத்துடன் பார்ட்டி செய்தது,விஜய்சேதுபதி உடனான நீண்ட உரையாடல்,தளபதி விஜய் உணவு பரிமாறியது,அட்லீ மற்றும் ப்ரியாவின் விருந்தோம்பல் என சென்னை படப்பிடிப்பு மிகவும் நிறைவாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.