தனக்கே உரித்தான தனி ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களில் நீங்க இடம் பிடித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இதனிடையே தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், வாரிசு திரைப்படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வாரிசு படம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வெளியிட அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் ஷாம் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும் போது ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பேசினார். அப்போது "ராஷ்மிகா அவர்களும் படப்பிடிப்பிற்கு வரும்போது மிகவும் பிரைட்டாக மிகவும் ஒழுக்கமாக மிகவும் ஆக்டிவாக எனர்ஜிட்டிக்காக இருப்பார். ஆனால் தவிர்க்க முடியாமல் என்ன ஆகிவிடும் என்றால் ராஷ்மிகாவை மிகவும் கம்மியாக பார்ப்போம். ஏனென்றால் பக்கத்தில் தளபதி… எல்லோரும் விஜய் அண்ணா என்ன செய்ய போகிறார் என்றுதான் பார்ப்போம். நான் கூட சொன்னேன் சாரி ராஷ்மிகா யாருமே உங்கள பார்க்க முடியாதுங்க ஏன்னா பக்கத்துல தளபதி இருக்காரு… பாடலின் போது கூட சொன்னேன் நீங்கள் எவ்வளவு ஆடினாலும் கண்கள் அவரிடம் தான்.. ஏனென்றால் விஜய் அண்ணா வந்தாலே பார்வை அங்கேதான் போகும். ஆனால் ராஷ்மிகா மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையிலான பேரிங் மிகவும் அழகாக இருக்கும். இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இருவருமே நல்ல நடனம் ஆட கூடியவர்கள். நல்லா இருக்கும்..!" என ஷாம் தெருவித்துள்ளார். ஷாமின் அந்த முழு பேட்டி இதோ…