பிரபல மாடலாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரக்ஷா ஹோலா.கன்னடத்தில் சில சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரக்ஷா.சில சூப்பர்ஹிட் கன்னட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரக்ஷா ஹோலா.

தமிழ் கடவுள் முருகன் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் தனது என்ட்ரியை கொடுத்தார் ரக்ஷா ஹோலா.இதனை அடுத்து விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார் ரக்ஷா.இந்த தொடரில் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் ரக்ஷா.

இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடரில் ஹீரோயினாக நடித்து கலக்கி வந்தார் ரக்ஷா.விக்ரம் ஸ்ரீ இந்த தொடரின் நாயகனாக நடித்து வந்தார்,இவர்களுடன் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் ராசைகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.தொடரின் நாயகியாக நடித்து வந்த ரக்ஷா சில காரணங்களால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக வேறு நடிகையை தேடும் பணி தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ரக்ஷா சம்மந்தமான காட்சிகள் எதுவும் ஒளிபரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் ரக்ஷாவிற்கு தோழியாக நடித்து வரும் ப்ரியா அப்படி ஏதவாது நடந்தால் சேனல் தரப்பில் அறிவிப்பார்கள் தற்போது வரை யாரும் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.ரக்ஷா விலகியுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றாலும் இவர் தொடர்கிறாரா இல்லை விலகிவிட்டாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.