மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா இசை.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இந்த தொடரில் இருந்து விலகுவதாக 2020 தொடக்கத்தில் அறிவித்தார்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் இவர் விலகிய கொஞ்ச நாட்களிலேயே கைவிடப்பட்டது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹி தொடரான என்றென்றும் புன்னகை தொடரை தயாரித்தும் வருகிறார் நீலிமா இசை.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நீலிமா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவருக்கு சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது சோகமளிக்கும் விதமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது.இவரது மாமியார் பிரேமவாதி நேற்று இயற்கை எய்தினார் என்ற துக்க செய்தி கிடைத்துள்ளது.இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

serial actress neelima esai mother in law premavathi passes away at age of 72