விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் சமீபத்தில் ரஞ்சித்தின் நிஜ மனைவியான ப்ரியா ராமன் இணைந்துள்ளார்.பல விறுவிறுப்பான திருப்பங்களோடு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடர் நிறுத்தப்படுவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் தொடர் தொடங்கியுள்ளதால் ஏதேனும் ஒரு தொடரை நிறுத்தவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர்,இதனை அடுத்து இந்த தொடரை விஜய் டிவி ஜனவரி மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்,இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.