பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் வாரிசு. முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படம் குறித்தும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், தளபதி விஜய் உடன் வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்த முதல் காட்சி எது அது பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா? எனக் கேட்டபோது, “நீங்கள் ட்ரெய்லரில் பார்த்திருப்பீர்கள் அதில் ஏதோ எனக்கும் அவருக்கும் ஒரு MISS UNDERSTANDING இருப்பது போல ஒரு காட்சி இருந்திருக்கும். அதுதான் என்னுடைய முதல் காட்சி. அந்த MISS UNDERSTANDING என்ன என்பதற்கு ஒரு காட்சி எடுத்தார்கள். ஏன் இந்த இரண்டு நபர்கள் சந்திக்கிறார்கள்... அதுதான் என்னுடைய முதல் காட்சி” என சரத்குமார் தெரிவித்துள்ளார் மேலும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட சரத்குமார் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…