மண்  மற்றும் மண் சார்ந்த வாழ்வியல், அதில் நடக்கும் உறவுகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி 2013 ம் ஆண்டில் வெளியான படம் ‘மதயானை கூட்டம்’ . நல்ல வரவேற்பை பெற்று கவனிக்க தக்க இயக்குனரானவர் விக்ரம் சுகுமாரன். யதார்த்தம் மீறாமல் கதையை நேர்த்தியாக பதிவு செய்யும் இயக்குனராக கவனிக்கப்பட்டவர் விக்ரம் சுகுமாரன். இவர் வெற்றிமாறனின் தேசிய விருது குவித்த ஆடுகளம் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர். மேலும் கொடிவீரன் படத்தின் மூலம் நடிகராகவும் களம் இறங்கினார், அதன் பின் நீண்ட இடைவெளியை கையில் எடுத்தார் விக்ரம் சுகுமாறன்.

அதன் பின் சாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தை இயக்க தொடங்கினார், கொரோனா நோய் தோற்று பரவலால் படபிடிப்பு பாதியில் நின்றது. அதன் பின் கொரோனா குறைந்ததையடுத்து மீண்டும் படத்தை முழுவீச்சில் இயக்கி முடித்துள்ளர். தற்போது இறுதிகட்ட பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கான டிரைலர் போஸ்டர் வெளியிட்டார்.  அதில், தற்போது அந்த போஸ்டர் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் போஸ்டரில் வாரிசுடனும், துணிவுடனும் முன்னோட்டமாக எங்கள் இராவண கோட்டமும்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித் விஜய் நடிப்பில் நாளை வெளியாக விருக்கும் படம் துணிவு, வாரிசு இப்படத்தின் வெளியீட்டை தமிழ் நாடே எதிர்நோக்கி உள்ளது. முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் முதல் பிரம்மாண்ட படமாக இந்த இரு படங்களும் உள்ளது, இதனிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம் திரைப்படத்தின் டிரைலர் படத்துடன் வெளிவருவது ரசிகர்களிடம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம் பட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. இதில் நடிகர் சாந்தனு முன்னணி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சாந்தனு 'மாஸ்டர்' , 'தங்கம்' , 'முருங்கைக்காய் சிப்ஸ்' மற்றும் சில ஆந்தாலாஜிகளில் நடித்தாலும் தொடர் தோல்வி படங்களையடுத்து அவர் தேர்ந்தெடுத்த கதை இது. மேலும் விக்ரம் சுகுமாரனுடன் இணைந்தது ஒரு முக்கிய திருப்புமுனையாக அவரது திரைப்பயணத்தில் இருக்கும்.

மதயானை கூட்டம் படம் மூலம் அறிமுகமான நடிகர் கதிர் அவரது முதல் படத்திலே தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்றார், மேலும் கலையரசன் உட்பட பலர் அந்த படம் மூலம் பேசப்பட்டனர் என்பதால் இராவண கூட்டம் படம் சாந்தனுவிற்கு ஒரு நல்ல கவனிக்கதக்க படமாக அமையும்.