தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா,இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற சமந்தாவிடம் அவரது சமீபத்திய செம ஹிட் பாடலான ஊ சொல்றியா பாடலின் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்த பாடலுக்கு இந்தியா முழுவதும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இவ்வளவு பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று சமந்தா தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்