தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை சமந்தா கிட்டத்தட்ட தமிழ் & தெலுங்கு திரை உலகின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். மேலும் கடந்த ஆண்டு (2021) ரிலீசான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற “ஊ சொல்றியா” பாடலுக்கு மட்டும் நடனமாடியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ள சமந்தா Arrangements of Love எனும் நாவலை தழுவி உருவாகும் புதிய ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இணைந்து இயக்கும் யசோதா படத்திலும் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகும் யசோதா தமிழ், தெலுங்கு உட்பட இந்தியாவின் 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே நடிகை சமந்தா நடிப்பில் மற்றொரு PAN INDIA திரைப்படமாக தயாராகியிருக்கும் படம் சாகுந்தலம்.

புராண கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். சமந்தாவுடன் இணைந்து அதிதி பாலன், தேவ் மோகன், அனன்யா நகலா, பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக சாகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 
samantha completed her dubbing for shaakuntalam movie