பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் இயக்குனர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.பெரிய பட்ஜெட்டில் சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR இருவரும் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.

இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகவுள்ளது.ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் பிடித்த தமிழ் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.4 ஆண்டுகளாக படங்கள் பெரிதாக பார்க்கவில்லை என்றும் சமீபத்தில் விஜயின் மாஸ்டர் படம் பார்த்ததாகவும் அது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.அனிருத்தின் மியூசிக்கும் மிகவும் பிடித்திருந்தது என்று அவர் தெரிவித்தார்.