தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் மூலம் தமிழில்  நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து கடந்த ஆண்டில்(2021) அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா-The Rise திரைப்படத்திலும் கதாநாயகியாக கலக்கிய ராஷ்மிகா, சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்தடுத்து ஹிந்தியில் அனிமல், மிஷின் மஞ்சு மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் மீது கொட்டப்படும் மோசமான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “திரையுலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து தொடர்ந்து என் மீது வன்மம் கொண்டு மோசமான நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர். நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த துறை சிக்கல் ஆனது என எனக்கு புரிகிறது. இருப்பினும் எனக்கு பிடித்ததை முழு மனதோடு செய்கிறேன். மேலும் என்னை பிடித்தவர்களும் இங்கே இருக்கிறார்கள் அவர்களுக்காக நான் தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டே இருக்கிறேன். அவர்களின் அளவு கடந்த அன்பும் அவர்கள் தொடர்ந்து எனக்கு கொடுக்கும் ஆதரவும் தான் இது குறித்து வெளிப்படையாக தற்போது என்னை பேச வைத்திருக்கிறது.” என குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். ரஷ்மிகா மந்தனாவின் அந்த அறிக்கை இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)