பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது

மீண்டும் விஜய் டிவியில் ஹீரோயினாக தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலர்ஸ் தமிழில் அம்மன் தொடரில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி அசத்தினார்.தற்போது தனது சினிமா என்ட்ரியை கொடுக்கிறார் ரச்சிதா.நடிகரும்,இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ரச்சிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்