மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் ஹீரோயினாக அசத்தி வருபவர் தேஜஸ்வினி கௌடா.கன்னட சீரியலில் ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தெலுங்கு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் தேஜஸ்வினி கௌடா.இந்த தொடரில் இவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தேஜஸ்வினி கௌடா.

இதனை தொடர்ந்து Care of Anausya என்ற தொடரில் நடித்து அசத்தி வருகிறார் தேஜஸ்வினி கௌடா.சில வாரங்களுக்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பை தொடங்கிய வித்யா நம்பர் 1 என்ற தொடரில் தேஜஸ்வினி ஹீரோயினாக நடித்துள்ளார்.இனியன் இந்த தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.

ரசிகர்களின் ஆதரவை பெற்று இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.இந்த தொடரின் நாயகன் தற்போது மாற்றப்பட்டுள்ளார் எதிர்பாராத விதமாக நாயகனாக நடித்து வந்த இனியன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலக அவருக்கு பதிலாக அழகிய தமிழ் மகள்,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி செரிலாலில் ஹீரோவாக நடித்த புவி முத்துசாமி இணைந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)