ஜில்லா - வீரம் ஆகிய திரைப்படங்களின் ரிலீசுக்கு பிறகு 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக ரிலீசாகின்றன. பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்பெயனராக தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அதிரடியான ஆக்ஷன் & HEIST படமாக அஜித் குமாரின் துணிவு படமும் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகி மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு (தெலுங்கில் வாரிசுடு) படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது படமாக அஜித்குமார் துணிவு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ட்ரெய்லர் மீது இருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ளார். அப்படி பேசுகையில்,

“ஒரு ஒரு படமும் ஒரு ஒரு கான்செப்ட்… பீஸ்ட் திரைப்படம் வந்த பிறகுதான் இந்த படம் ஷூட்டிங் சென்று இருப்பார்கள். ஏற்கனவே இப்படி ஒரு கான்செப்ட் இருக்கிறது நாம் எடுத்தால் பிரச்சனை வருமா வராதா என அவர்களுக்கும் தெரியும். அஜித் சாரும் எல்லா விமர்சனங்களையும் பார்த்து இருப்பார். பீஸ்ட் படத்திற்கு என்ன மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் வந்தது என அவருக்கும் தெரியும். அப்படி போய் தைரியமாக பரவாயில்லை நாமும் ஒரு படம் கொடுத்து விடுவோம் பீஸ்ட் மாதிரி என யாரும் எடுக்கமாட்டார்கள். வேறு ஏதாவது ஒரு விஷயம் உறுதியாக இருந்தால்தான் துணிவு திரைப்படத்தை எடுத்திருக்க முடியும். துணிவு திரைப்படம் என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு மங்காத்தா மாதிரி என்டர்டெய்னிங்கான ஒரு HEIST படமாக தான் இருக்கும். பயங்கர என்டர்டெய்னிங்காக ஜாலியாக இருக்கும். அதோட ஆக்சன் எல்லாமே சேர்ந்து இருக்கும். இந்த TROLLSக்கு பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால் ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும். ஏதாவது ஒன்று கிடைத்தால் அதை வைத்தே TROLL செய்வார்கள். அதேபோலதான் வாரிசு திரைப்படத்தையும் சொல்கிறார்கள். அது தெலுங்கு திரைப்படம் போல் இருக்கிறது சீரியல் மாதிரி இருக்கிறது என சொல்கிறார்கள். இப்போது வாரிசு படத்தை பொருத்தவரைக்கும் எப்படி எல்லாம் TROLL வருகிறது. துணிவிற்கு வருவது போலவே இதற்கும் வருகிறது. தெலுங்கு படம் மாதிரி இருக்கிறது சீரியல் என்றெல்லாம் சொல்கிறார்கள் என்னை பொறுத்த வரைக்கும் உங்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா? இவ்வளவு தான் முக்கியம். அது தெலுங்கு படமாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி படம் நன்றாக இருந்தால் பார்த்து ரசிப்பார்கள்” என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஞ்செயனின் அந்த முழு பேட்டி இதோ…