நடன இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இந்தியாவின் முன்னணி நடன இயக்குனராக அவதரித்தவர் பிரபுதேவா.பின்னர் நடிகராகவும்,இயக்குனராகவும் அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் பிரபுதேவா.அடுத்ததாக பொய்க்கால் குதிரை,பிளாஷ்பேக்,ரேக்ளா,மை டியர் பூதம் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும்  திரைப்படம் 'ரேக்ளா'. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வால்டர்' பட இயக்குநர் அன்பு இயக்குகிறார்.

வாணி போஜன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.ரோபோ ஷங்கர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ரேக்ளா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.