ஹாய் குந்தவை.. மீண்டும் சூடு பிடிக்கும் பொன்னியின் செல்வன்.. – வந்தியத்தேவன் கார்த்தியின் வைரல் பதிவு இதோ..

பொன்னியின் செல்வன் பட விளம்பர வேலை மீண்டும் துவங்கியது - Ponniyin Selvan actor Karthi tweet goes viral | Galatta

தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு கதைக்களமான கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் பொங்க வைத்தவர் இயக்குனர் மணிரத்தினம். சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி , திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, லால், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் காக்கமனு, விக்ரம் பிரபு மற்றும் பல நட்சத்திரங்களின் கூட்டணியில் மிக பிரம்மாண்ட படைப்பாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமான உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்தார். மேலும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் முதல் படத்தின் பாடல் மிகப்பெரிய அளவு வரவெற்பு பெற்று அதிகம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்  முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. தற்போது இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேளைகளில் படக்குழு இறங்கியுள்ளது. இதனிடையே முதல் பாகத்தில் இடம் பெற்று இரண்டாம் பாதியில் முழு பாடலாக அமைந்த ‘அகநக பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் கார்த்தி நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் “ ஹாய் இளைய பிராட்டி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இளையபிராட்டி… hi😊@trishtrashers

— Karthi (@Karthi_Offl) March 20, 2023

அதன் பின் நீண்ட நேரம் திரிஷாவிடம் பதில் வராமல் இருக்க “என்ன பதிலே வரவில்லை” என்று மீண்டும் பதிவிட்டார் கார்த்தி. அதனை தொடர்ந்து தற்போது திரிஷா “என்ன வாணர்குல இளவரசே” என்று குறிப்பிட்டு தங்கள் உரையாடலை நீட்டிக் கொண்டு வருகிறார்.

தங்கள் தரிசனம் கிடைக்குமா 😍😍? https://t.co/4nMfNpBZiW

— Karthi (@Karthi_Offl) March 20, 2023

தற்போது கார்த்தி, திரிஷா பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய அளவு அனைவருக்கும் கொண்டு சென்றதற்கு காரணம் அப்படக்குழு செய்த விளம்பரங்கள் தான்/ குறிப்பாக படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்களின் பெயரை சமூக வலைதளங்களில் மாற்றி ஒருவருக்கொருவர் தூய தமிழில் உரையாடிக் கொண்டிருந்தனர். இதுவே இணையவாசிகளுக்கு மிகப்பெரிய அளவு  புத்துணர்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல் படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியது.அதன் படி இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் நடிகர்கள் தங்கள் தனித்துவமான உரையாடலை தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் இன்று முதல் திரைப்படத்திற்கான விளம்பரங்கள் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வந்தியத்தேவன் New Look – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வந்தியத்தேவன் New Look – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

Chef வெங்கடேஷ் பட் எடுக்கும் புது அவதாரம்  - உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

Chef வெங்கடேஷ் பட் எடுக்கும் புது அவதாரம் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான அறிவிப்பு இதோ

தனுஷ் நடித்த படங்களிலே இதுதான் அதிகபட்ச வசூல்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - ‘வாத்தி’ படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

தனுஷ் நடித்த படங்களிலே இதுதான் அதிகபட்ச வசூல்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - ‘வாத்தி’ படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் இதோ..