"இயக்குனர் பாலா பணத்த வாங்கிட்டு ஏமாத்திட்டாரு!"- படுத்த படுக்கையில் புலம்பிய பிதாமகன் பட தயாரிப்பாளர்! வீடியோ இதோ

பாலா ஏமாற்றிவிட்டதாக படுத்த படுக்கையில் புலம்பும் பிதாமகன் தயாரிப்பாளர்,pithamagan producer va durai about director bala cheated him | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக தனது எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் தயாரிப்பாளர் VA.துரை. தனது முதல் திரைப்படமாக இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் கதாநாயகனாக நடித்த என்னம்மா கண்ணு திரைப்படத்தை தயாரிப்பாளர் VA.துரை தயாரித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்த தயாரிப்பாளர் VA.துரை நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த லூட்டி திரைப்படத்தை தயாரித்தார்.

பின்னர் மீண்டும் இயக்குனர் சக்தி சிதம்பரம் உடன் இணைந்த தயாரிப்பாளர் VA.துரை நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்த லவ்லி திரைப்படத்தை தயாரித்தார். அடுத்ததாக மூன்றாவது முறை மீண்டும் சத்யராஜ் உடன் இணைந்த தயாரிப்பாளர் VA.துரை தயாரிப்பில் விவரமான ஆளு திரைப்படமும் வெளிவந்தது. இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்தை தயாரிப்பாளர் VA.துரை தயாரித்தார். பெரிதும் கவனிக்கப்பட்ட பிதாமகன் திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளை பெற்றது. மேலும் நடிகர் சீயான் விக்ரமுக்கு முதல் தேசிய விருதையும் பிதாமகன் படம் பெற்றுக் கொடுத்தது.

அடுத்ததாக விஜயகாந்த் உடன் இணைந்த VA.துரை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த கஜேந்திரா திரைப்படத்தை தயாரித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த கஜேந்திரா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. பின்னர் இவர் தயாரித்த நாய் குட்டி திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த VA.துரை அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கிறார்.

தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவ உதவிக்கு கூட போதிய பண வசதி இல்லாமல் தவிக்கும் அவர் தற்போது தனக்கு உதவும் படி வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை அடுத்து நடிகர் சூர்யா தயாரிப்பாளர் துரை அவர்களின் மருத்துவ உதவிக்காக இரண்டு லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் துறை அவர்கள் இயக்குனர் பாலா தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக படுத்த படுக்கையில் மிகுந்த வருத்தத்தோடு பேசினார். பிதாமகன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இயக்குனர் பாலா அவர்களை அணுகிய தயாரிப்பாளர் துரை அதற்காக முன் பணமாக 25 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் அந்த பணத்தை பெறவே இல்லை என பாலா ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பணத்தை திருப்பி கேட்டு பலமுறை போராடியதாகவும் அவரது அலுவலகத்திற்கு சென்று உண்ணாவிரத போராட்டம் கூட செய்ததாகவும் ஆனால் தன்னிடம் முன்பணம் வாங்கவே இல்லை என மறுத்த இயக்குனர் பாலா வாங்கிய பணத்தை வாங்கவில்லை என ஏமாற்றி அனுப்பி விட்டதாக மிகுந்த வேதனையோடு தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் மிகுந்த வேதனையில் இருக்கும் தயாரிப்பாளர் VA.துரை அவர்களின் அந்த பேட்டி இதோ…
 

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு... காலில் கட்டுடன் நடைபழகும் புகைப்படம்! விவரம் உள்ளே
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு... காலில் கட்டுடன் நடைபழகும் புகைப்படம்! விவரம் உள்ளே

தளபதி விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா..? வைரலாகும் இயக்குனர் SAசந்திரசேகரின் பதில் உள்ளே!
சினிமா

தளபதி விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா..? வைரலாகும் இயக்குனர் SAசந்திரசேகரின் பதில் உள்ளே!

சினிமா

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட மாஸ் அப்டேட்!"- ஹோலி பண்டிகை வாழ்த்துக்களோடு வந்த அதிரடி அறிவிப்பு இதோ!