தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமானவர் மாரிமுத்து. இவர் 90 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றார் மாரிமுத்து. குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘பப்பி’, ‘மெஹந்தி சர்கஸ்’ , ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. மேலும் தற்போது மாரிமுத்து சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். இருந்தாலும் எதிர்நீச்சல் இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கதாநாயகன், கதாநாயகி காட்டிலும் இவர் வாரம் வாரம் இந்த சீரியல் மூலம் பிரபலமானவர். இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் திரைத்துறையில் நல்ல அபீப்ராயத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் 18+ கணக்கிலிருந்து “Can I call you” என்று அரைகுறை ஆடை கொண்ட ஒரு பெண்ணுடைய புகைப்படம் பகிரப்பட்டது . இதையடுத்து நடிகர் மாரிமுத்து தனது ட்விட்டர் கணக்கிலிருந்து தன்னுடைய தொலைபேசி எண்ணை அந்த பதிவில் கமேண்ட் செய்துள்ளார். அந்த எண்ணை true caller மூலம் சிலர் சோதித்து அது அவர் தான் என்று உறுதி செய்தனர். அதன் பின் மீம்களினாலும் ட்ரோல்களினாலும் இரண்டு நாட்களாக மாரிமுத்துவின் கமெண்ட் வைரலாகி வருகிறது. பல இடங்களில் பொது நாகரீகம் பேசும் மாரிமுத்து பொதுவெளியில் இப்படி செய்யலாமா என்று பலர் அவரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் அகிலன் மாரிமுத்து, “அந்த கணக்கு மாரிமுத்துவுடையது அல்ல. அவருடைய தொலைபேசி எண்ணை யாரோ தவறுதாலாக பயன்படுத்தியுள்ளார்கள்.” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
On behalf of @ActorMarimuthu (his official account) -
— Akilan Marimuthu (@akilangm) February 26, 2023
The account that has commented with his phone number doesn’t belong to him and his phone number is out in the public for quite sometime and it has been misused here. I kindly request @Schumy_Official to remove this post 🙏🏾
பிறகு இந்த வைரல் சம்பவம் தற்போது தணிந்து வருகிறது. மேலும் மாரிமுத்து பெயரில் கமெண்ட் செய்துள்ள அந்த கணக்கு தற்போது உபயோத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எளிதாக ஒருவரது தனிப்பட்ட எண் வெளியாகி அது தவறுதாலாக பயன்படுத்தப்பட்டு பின் அந்த நிகழ்வு வைரலாவது சமீபத்தில் பலருக்கு நடைபெற்று வருகிறது. பொதுவெளியில் பிரபலமானவர்கள் இதுபோன்ற தவறான சம்பவங்களுக்கு பலியாவது வழக்கமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.