தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் முன்னதாக இந்த ஆண்டில் (2022) சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல் மற்றும் வேழம் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம். தமிழில் நித்தம் ஒரு வானம், தெலுங்கில் ஆகாஷம் என உருவாகியுள்ள இப்படத்தை வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் அசோக்செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

நித்தம் ஒரு வானம் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சினிமாக்காரன் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் முதல் திரைப்படமாக நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We Are Happy to announce our First Theatrical Release @Rakarthik_dir @AshokSelvan @riturv @Aparnabala2 @shivathmikaR @GopiSundarOffl @vidhu_ayyanna @editoranthony @Viacom18Studios @riseeastcre @vinoth_offl @proyuvraaj#cinemakaaran pic.twitter.com/oSto8GbXPh

— cinemakaaran (@Cinemakaaranoff) October 27, 2022