இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா மற்றும் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் தங்களது சினிமா பணிகளை சமீபத்தில் தொடங்கினர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல்முறையாக அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

மேலும் நடிகை நயன்தாரா மீண்டும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கினார். இதனிடையே தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் இருவரும் பெற்றோர்கள் ஆகின்றனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளின் பிஞ்சு பாதங்களுக்கு முத்தமிட்டபடியே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் “நயன் மற்றும் நான் இப்போது அம்மா & அப்பா ஆக்கியுள்ளோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுடைய உயிர் மற்றும் உலகம் இரண்டிற்கும் வேண்டும்…” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

Nayan & Me have become Amma & Appa❤️
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9

— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022