தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் நெற்றிக்கண். பார்வையற்ற நபராக நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் சீரியல் கில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்து வாக்குல் ரெண்டு காதல் & இயக்குனர் அட்லி இயக்கும் பாலிவுட் திரைப்படம் என பல திரைப்படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

அடுத்ததாக நேரம் மற்றும் பிரேமம் என சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாராகும் கோல்ட் படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் தயாராகும் கோல்ட் திரைப்படத்தை நடிகர் பிரித்வி ராஜ்-ன் பிரித்திவிராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோல்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் இன்று நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.