தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர்.இவர்களது திருமணம் கோலாகலமாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.செம கியூட்டான இந்த ஜோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி.முதல் முதலில் நயன்தாராவை இங்கே தான் பார்த்தேன்.இப்போது கணவன் மனைவியாக உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இருவரும்,திரைப்பயணம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.