தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை அனுஷ்கா செட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

முன்னதாக நடிகர் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளிவந்தது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுஷ்காவின் பிறந்த நாளான கடந்த நவம்பர் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படத்தை ,தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிரீஷ்ணா ரெட்டி தயாரிக்கவுள்ளார். முன்னதாக யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா நடித்த மிர்ச்சி மற்றும் பாகமதி ஆகிய திரைப்படங்கள்  ஹிட் அடித்ததை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் விதமாக இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நடிகை அனுஷ்காவின் 48-வது திரைப்படமான இந்த புதிய திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்குகிறார். இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜன்ட் சாய் சீனிவாச அத்ரெயா படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.