சொந்த ஊர் மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நடிகர் நந்தா !
By Sakthi Priyan | Galatta | May 05, 2020 14:10 PM IST
கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நந்தா. புன்னகை பூவே, கோடம்பாக்கம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்காக நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நந்தா, கோவை அருகே உள்ள தனது சொந்த ஊரான சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். நந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு அந்த கிராமத்து மக்கள் நன்றி கூறியுள்ளனர்.
Bigg Boss Sherin's latest emotional statement thanking her fans - check out!
05/05/2020 02:00 PM
Jai and Vani Bhojan pair up for a comedy web series - exclusive updates here!
05/05/2020 01:34 PM
WOW: Vijay Antony reduces his salary by 25 percent to help producers!
05/05/2020 11:57 AM