“அப்பா இறந்ததை நான் அம்மாவிடம் சொல்லவில்லை” மறைந்த மயில்சாமியின் மகன் பகிர்ந்த தகவல் - உருக்கமான வீடியோ இதோ..

மயில்சாமி உடல்நலம் குறித்து அவரது மகன் விளக்குகிறார் வீடியோ இதோ - Mayilsamy son explains mayilsamy health history | Galatta

கடந்த பிப்ரவரி 19 ம் தேதி திரையுலகமே சோகத்தில் மூழ்கிய நாள் என்றே சொல்லலாம். பல தசாப்தங்களாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரபல மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். இவரின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதனையடுத்து மயில்சாமியின் மகன் அன்பு மயில் சாமி நமது கலாட்டா ஏற்பாடு செய்திருந்த பேட்டியில் கலந்து கொண்டு நடந்த சம்பவம் குறித்து விளக்கினார் . அதில்

மயில்சாமிக்கு இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டதா மேலும் அவரது பழக்க வழக்கங்கள் என்பது குறித்து விளக்கினார் அன்பு மயில்சாமி.

அதில் அவர், "நான் அப்பா இறந்ததை அம்மாவிடம் காலை 6 மணி வரை சொல்லவே இல்லை. நான் அவர்களிடம் சொன்னா அவங்க மனநிலை எப்படி இருக்கும். அவங்களால அதை தாங்க முடியாது அதனால நான் சொல்ல யோசிச்சேன். அதன் பின் ராமசந்திரா மருத்துவமனையில் தான் சொன்னேன்.. அப்போ அம்மா உடைஞ்சு போயிட்டாங்க..

ஒருமுறை எதேச்சையாக அவராகவே மருத்துவமனையில் முழு பரிசோதனைசெய்வதற்காக சென்றார். அதன் பிறகுதான் தெரிய வந்தது இதய குழாயில் அடைப்பு உள்ளது என்று, அதை அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால் அதனை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்தோம். பின்னர் அவர் நலமாக இருந்தார். அதன்பின் அப்பாவிற்கு 2021 ல் மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு அவராகவே மருத்துவமனையில் சென்று பார்த்தார். பின் கடந்த கார்த்திகை தீபம் அன்று  மாரடைப்பு ஏற்பட்டது அவருக்கு..  மருத்துவமனையில் அவராகவே அனுமதி பெற்றார். அப்பாக்கு எப்போதெல்லாம் நெஞ்சுவலி வருமோ அவரே மருத்துவமனையில் சென்று அனுமதி ஆகிடுவாரு.. அவர் வலி அதிகமா வராது. இந்த முறை அதுபோல எதுவும் அறிகுறி எதுவும் இல்லை..” என்றார்.

மேலும் மயில்சாமியின் பழக்கவழக்கங்களினால் தான் இது போன்று நிகழ்ந்தது என்ற வதந்திகள் குறித்து அன்பு மயில் சாமி, "அவர் கடந்த 3 மாதங்களாகவே குடிக்கிறது இல்லை. அவரை அழைத்து மருத்துவர் அறிவுறுத்தினார் அதன்பின் அவரது பழக்க வழக்கங்களை மொத்தமாக மாற்றினார். சின்ன வயசுல இருந்து குடிக்கிற பழக்கம் லாம் இல்ல.. எப்போதாவது தான் குடிப்பார். அதுவும் குறைவா.. மருந்து மாத்திரை எடுத்து கொள்ளும் நேரத்தில் அதை தொடக்கூட மாட்டார். வாரத்திற்கு இரண்டு முறை அப்படி தான் அன்று இருந்தது. அதையெல்லாம் விட்டு 3 மாதம் ஆகுது" கடைசியாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நான் ரொம்ப பயந்துட்டேன். 15 நாள் மருத்துவமனையில் இருந்தார் சிகிச்சைக்கு பின் குடிக்கறது இல்ல அவர்.  எதிர்பாராத வகையில் கடவுள் அவரை கூட்டி கொண்டு போய்விட்டார்” என்றார்.

மேலும் மயில்சாமி இறப்பு மற்றும் அது தொடர்பாக நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து அன்பு மயில்சாமி பகிர்ந்த தகவல் கொண்ட வீடியோ இதோ..

“எனக்கு Inspiration ராஜமௌலி தான்..” மணிரத்தினம் அளித்த அட்டகாசமான பதில் - ஆச்சரியத்தில் உறைந்த ராஜமௌலி.. விவரம் இதோ..
சினிமா

“எனக்கு Inspiration ராஜமௌலி தான்..” மணிரத்தினம் அளித்த அட்டகாசமான பதில் - ஆச்சரியத்தில் உறைந்த ராஜமௌலி.. விவரம் இதோ..

“அப்பா இறப்பதற்கு முன்..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் மகன்.. - சம்பவம் குறித்து விளக்கும் முழு வீடியோ இதோ..
சினிமா

“அப்பா இறப்பதற்கு முன்..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் மகன்.. - சம்பவம் குறித்து விளக்கும் முழு வீடியோ இதோ..

நீண்ட நாளுக்கு பிறகு ‘அந்தகன்’.. சிறப்பு காட்சிகளுடன் வெளியானது கண்ணிலே பாடல்.. -  வைரலாகி வரும் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

நீண்ட நாளுக்கு பிறகு ‘அந்தகன்’.. சிறப்பு காட்சிகளுடன் வெளியானது கண்ணிலே பாடல்.. - வைரலாகி வரும் அட்டகாசமான பாடல் இதோ..