தமிழ் சினிமாவில் சம கால இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பதும் வானம் கலை நிகழ்ச்சி மற்றும் இதர கலை நிகழ்சிகளையும் ஒருங்கிணைத்தும் வருகிறார்.  

இவரது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடக்ஸன்ஸ் என்ற பயரில் பல படங்களில் தயாரித்து வருகின்றார். இதன் மூலம் நிறைய இளம் இயக்குனர்கள் நடிகர்கள் பயன்பெற்றும் வருகின்றனர். இயக்குனர் மாரிசெல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது லீப் கிரியேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் கதைக்களத்துடன் அமைந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்

பெயரிடப்படாத இப்படத்தை பா ரஞ்சித் ன் முன்னாள் உதவி இயக்குனர் ஜெயகுமார் இயக்குகிறார் இதில் நடிகர் அசோக் செல்வன், சாந்தனு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் படத்தின் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார், இப்படத்திற்கு 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்  தமிழ்ப்பிரபா, ஜெய்குமார் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெயரிடப்படாத இப்படம் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் காட்சிகளில் நடிக்கும் போது நடிகர் சாந்தனு காயத்திற்குள்ளானார். இந்நிலையில் படபிடிப்பில் ஏற்பட்ட காயத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார் சாந்தனு.

Injuries at shoot #Shootdiaries pic.twitter.com/Uh0BtlNZwV

— ஷாந்தனு (@imKBRshanthnu) January 4, 2023

 

அந்த பதிவின் கீழ் அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து கொண்டனர். மேலும் காயம் குறித்தும் படம் குறித்தும் ரசிகர்கள் கேட்டு வரும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து வருகிறார் நடிகர் சாந்தனு.நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி  அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். பாவகதைகள் தொடரில் இயக்குனர் சுதாவின் இயக்கத்தில் வெளியான தங்கம் படம் மூலம் பாராட்டை பெற்ற இவர் பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவர் பார்கவவாக நடித்து பலரது கவனத்தை பெற்றார். தற்போது சாந்தனு ஸ்டோரி ஆப் திங்க்ஸ் தொடரிலும் ராவணகோட்டம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.