இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகிவருகிறது பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் , அடுத்த ஆண்டு (2022) கோடை விடுமுறை விருந்தாக பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்புக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய காட்சியின் பின்னணி இசை கோர்ப்புக்கான விஷயங்களை மணிரத்னம் விவரிக்க ஏ.ஆர்.ரகுமான், ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அதனை கவனிக்கும் புதிய வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)