இந்திய திரையுலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. 2 பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து 2வது பாகமும் அடுத்த 6 - 9 மரங்களுக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியாது. சோழ சாம்ராஜ்யத்திற்கு எதிராக பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் சபதமேற்க்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அந்த காட்சி இதோ…