கடந்த 70 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல ஜாம்பவான்கள் முயற்சிசெய்து கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் பெரும் முயற்சியால் தற்போது சாத்தியமாகியுள்ளது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வசனங்கள் எழுதி உள்ளார்.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆன தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகமும் அடுத்த 6-9 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த புரோமோ இதோ…