தனது அறிமுக படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்திலேயே இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் M.சசிகுமார். தொடர்ந்து நடிகராக அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சசிகுமாரின் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்”  திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காரி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் காரி திரைப்படத்தில் பார்வதி அருண், சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெட்டின் கிங்ஸ்லீ, நாகி நீடு, ராம்குமார் & சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இயக்குனன் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ள  காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக  காரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தற்போது காரி திரைப்படத்தின் முதல் பாடலாக கொப்பமவனே பாடல் வெளியானது. அந்த பாடல் இதோ…