தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

அடுத்ததாக பாலாவுடன் சூர்யா 41,வெற்றிமாறனுடன் வாடிவாசல் என அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.பாலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று முடித்திருந்தார் சூர்யா.சூர்யா 41 படத்தினை 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்கின்றனர்.நந்தா,பிதாமகன் உள்ளிட்ட படங்களை அடுத்து சூர்யா பாலாவுடன் இணைவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று முடிந்தது,அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றையும் சூர்யா சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நமது The Galatta Crown 2022 விருது விழாவில் சூர்யா 41 பட நாயகி க்ரிதி ஷெட்டி , படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,சூர்யா பாலா போன்றவர்களுடன் இணைந்து வேலை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்