அரசியல்வாதிகளை கைது செய்யுங்கள்: சோபியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கமல்
By Vinesh RV | Galatta | September 04, 2018 17:41 PM IST
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்றுள்ளார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த மாணவி சோபியா ’பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று முழக்கமிட்டுள்ளார்.
இதனால் மாணவி சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதிற்கு எதிராக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2018
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.