தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக இவரது 25ஆவது திரைப்படமான பூமி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,அகிலன்  உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் நடிக்கும் 30ஆவது படத்தினை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

JR 30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை SMS,பாஸ் என்கிற பாஸ்கரன்,ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்குகிறார்.ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்