தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக இவரது 25ஆவது திரைப்படமான பூமி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வந்தார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் ஜெயம் ரவி.இவற்றை அடுத்து இவர் நடிக்கும் படத்தினை பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் மற்றொரு நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் ஒருகட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக ப்ரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்,இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.