ஒட்டு மொத்த இந்திய திரையுலக ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொண்ணியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், லால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று(செப்டம்பர் 18) பொன்னியின் செல்வன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருந்ததாகவும், அவர் நடிப்பதாக இருந்தால் மற்ற நடிகர்கள் விலகுவதாக தெரிவித்ததாகவும் கிளம்பிய வதந்திகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இவ்வாறு பேசுபவர்கள் எல்லாம் அருகிலிருந்து பார்த்தவர்கள் போலவே பேசுவார்கள்… எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார்கள் அதை நான் செய்யப் போகிறேன்.. அதை விட்டுவிட்டு நான் மணிரத்னம் அவர்களிடம்  இவர் வேண்டும் அவர் வேண்டும் எனக் கேட்டால் அவர் செய்து விடுவார் என்பது போல பேசுவார்கள்… இன்னொன்று சிலம்பரசன்.TR எனக்கு போன் செய்தார், “மச்சி நான் இருக்கேன்னா.. மொதல்ல சந்தோஷப்பட ஆள் நீதான் எனக்கு தெரியும், SORRY யாராவது ஏதாவது பேசி இருந்தா விட்ரு… இவங்க எல்லாம் இப்படித்தான்" என சொன்னார் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சர்ச்சையான இந்த வதந்தி குறித்த கேள்விக்கு ஜெயம் ரவியும் கார்த்தியும் பதிலளித்த அந்த வீடியோ இதோ…

At #PonniyinSelvan pressmeet today @actor_jayamravi clarifies on the rumour if #SilambarsanTR was casted as #Vanthiyathevan.@SilambarasanTR_ shares a good rapport with the casts of #PS1. It was baseless rumours 👍🏽 pic.twitter.com/ttsD24c5O7

— Roöpiì (@RealRoopii) September 18, 2022