ரேடியோ தொகுப்பாளினியினாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அசத்தி வருபவர் அஞ்சனா.ரேடியோ ஜாக்கியாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக மாறினார்.ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் அஞ்சனா.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து ஒரு மலையாள படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மலையாள சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.Jeevitha Nouka Sumithra என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார்.இந்த சீரியல் நிறைவடைந்த பின் Sasneham என்ற மலையாள சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் அஞ்சனா.இவருக்கு கடந்த வருடம்  Vishwa Kirti Misra என்பவருடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கீதாஞ்சலி தொடரில் ஒரு நாயகியாக நடித்து வருகிறார் அஞ்சனா. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.சில தினங்களுக்கு முன் இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு முற்றிலுமாக அக்கவுண்ட் முடக்கப்பட்டது.இதனை தொடர்ந்து புதிய அக்கவுண்ட் கிரியேட் செய்துள்ளார் அஞ்சனா.