இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா & நான் ஈ ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1&2 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்தது RRR திரைப்படம். RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் RRR திரைப்படம் இன்று மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

ரிலீசான அனைத்து இடங்களிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள RRR திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள திரையரங்கில் RRR திரைப்படத்தை காண ரசிகர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரசிகரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.