மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகில்  இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து முன்னணி நடன இயக்குனரான பிருந்தா இயக்கும் முதல் திரைப்படமான ஹே சினாமிகா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் ஹே சினாமிகா மற்றும் மலையாளத்தில் சல்யூட் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் துல்கர்.

முன்னதாக இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படம் வருகிற நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் குருப் படத்தில் துல்கர் சல்மான், சுகுமார குருப் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ள குருப் திரைப்படத்தை வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் குருப் திரைப்படத்திலிருந்து "உறவெனும் வழியே" எனும் பாடல் சற்று முன்பு வெளியானது. அந்தப் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.